1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 29 அக்டோபர் 2018 (13:06 IST)

முதல்வர் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க இடைக்காலதடை : உச்ச நீதிமன்றம்

சிபிஐ விசாரணக்கு தடை கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ,லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வி எழுப்பிஉள்ளார்.
மேலும் திமுக தொடுத்த  முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபியை விசாரிக்க உத்தரவிடப்பட்டதை எதிர்த்த வழக்கில், மனு மீது இன்று உச்ச நீதிமன்றம்  உத்தரவு பிறபித்துள்ளது,
 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபியை விசாரிக்க இடைக்கால தடை விதித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முறைகேடு என புகார் எழுந்ததையடுத்து டெண்டரை உடனடியாக  ரத்து செய்யாதது ஏன்..? என கேள்வி எழுப்பினார்.
 
முதல்வர் சார்பில் டெண்டர் விவகாரம் தொடர்பான ஆவணங்கள் சீலிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.