வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 31 மே 2016 (15:17 IST)

ஜெயலலிதா தலையிடாவிட்டால் குடும்பத்தோடு தற்கொலை தான்: கதறும் சிவசங்கர்

பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் தனது மருமகளை கொடுமை படுத்தியதாக ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து அவரது மருமகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த சிவசங்கர் இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா தலையிட கோரிக்கை விடுத்துள்ளார்.


 
 
1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிவர் சிவசங்கர். இவருடைய மருமகள் ஜோதி, வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக இவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர், சினிமா துறையின் உச்சத்தில் இருக்கிற என் மீது எனது மருமகள் ஜோதி புகார் அளித்திருக்கிறார். எனது மகனுக்கும் ஜோதிக்கும் திருமணம் நடந்த போது ஜோதி குடும்பத்தாரிடம் வரதட்சணை எதுவும் நான் கேட்கவில்லை.
 
ஜோதிக்கும் எனது மகனுக்கும் அடிக்கடி சண்டை வந்ததால் அவர்கள் இருவரையும் தனிக்குடித்தனம் வைத்தோம். ஆனால் அங்கும் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இருவரும் சேர்ந்து வாழ மாட்டோம் என அவரவர் வீட்டுக்கு வந்தனர்.
 
இந்நிலையில் தற்போது ஜோதி எனது வீட்டிற்கு வந்து பிரச்சினை செய்கிறார். ஜோதியும் அவரது குடும்பத்தாரும் எங்களிடமிருந்து 10 கோடி பணமும், எங்களின் சொந்த வீட்டையும் கேட்டு மிரட்டுகிறார்கள்.
 
முதலமைச்சர் ஜெயலலிதா இந்தப் பிரச்சினையில் தலையிட்டு எங்களைக் காப்பாற்ற வேண்டும். இல்லை என்றால் குடும்பத்தோடு நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என சிவசங்கர் கூறியுள்ளார்.