செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2016 (16:02 IST)

சென்னையை கலக்கும் சூப்பர் நடன போலீஸ் குமார் : வீடியோ

சென்னைவாசிகளின் மனதை கொள்ளை கொண்டுள்ள ஒரு போக்குவரத்து காவலர் பற்றி செய்திகள் வெளியாகியிருக்கிறது.


 

 
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் போக்குவரத்து காவலராக தனது வேலையை சிறப்பாக செய்து வருபர்தான் குமார். இவர் பொதுமக்களிடம் காட்டும் அக்கறையும், அன்பும், பணியில் அவர் காட்டும் சுறுசுறுப்பும் அந்த பகுதி மக்களை கவர்ந்துள்ளது.
 
வெயில், மழை என்று பாராமல் ஓடோடி அவர் சுறுப்பாக போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் அழகுக்காக இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. எனவே இவரை ‘சூப்பர் காப்’ என்று அழைத்து சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்..
 
இவர் கைகளை காட்டும் விதமும், உடலை வளைத்தும், விசிலை அடித்தும் அவர் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் அழகை ரசித்துக் கொண்டே இவரை வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனர். சாலையை கடந்து செல்லும் முதியவர்களுக்கு உதவுகிறார். அவர்களோடு கனிவாக பேசுகிறார். இப்படி இன்னும் நிறைய..
 
இதுபற்றி அவரிடம் கேட்டால் “நான் பணியில் இருக்கும் போது, என்னை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஒரே நோக்கம். கண்ணுக்கு முன் தெரியும் மனிதர்களிடம் அன்பு செலுத்தாமல், கடவுளை வேண்டுவதில் எனக்கு உடன்பாடில்லை” என்று அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை கூறுகிறார் காவலர் குமார்.
 
உண்மைதானே...
 
அவர் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் அழகை நீங்களே பாருங்கள்..