வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2015 (17:35 IST)

பச்சையப்பன் கல்லூரியில் மோதல்: சக மாணவரை விரட்டி விரட்டி வெட்டிய மாணவர்கள்

பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவரை, அக்கல்லூரியைச் சேர்ந்த மற்ற மாணவர்களே அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னை பச்சையப்பன் கல்லூரியில், மாணவர்களிடையே அடிக்கடி மோதல் வலுத்து வருகிறது. ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது போய், இப்போது கத்திக்குத்து, அரிவாள் கலாச்சாரம் எல்லாம் இந்த கல்லூரிக்குள் புகுந்துவிட்டது.
 
இந்நிலையில், இன்று காலை அந்தக் கல்லூரிக்குள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த ஐந்து மாணவர்கள், சதீஷ்குமார் என்ற மாணவரை விரட்டி விரட்டி வெட்டினார்கள்.
 
இதில் அவரின் தலை, கை உட்பட பல இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டது. அந்த தாக்குதலுக்குப் பிறகு அந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
எதற்காக அந்த மாணவரை, பிற மாணவர்கள் தாக்கினார்கள் என்பது தெரியவில்லை. ஏதாவது முன் விரோதம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கிடையில், சதீஷ்குமாரை அரிவாளால் வெட்டிய மாணவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.