1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (13:06 IST)

இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை! – நீதிமன்றம் உத்தரவு!

இளையராஜா பாடல்களை எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த பல தசாப்தங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்து வருபவர் இளையராஜா. சமீப காலமாக தனது பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதை எதிர்த்து இளையராஜா வழக்குத் தொடர்ந்து வருகிறார்.

சமீபத்தில் எக்கோ மியூசிக், அகி மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒப்பந்தம் முடிந்த பிறகும் கூட காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இளையராஜாவின் இசையை குறிப்பிட்ட நிறுவனங்கள் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம்.