1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2015 (17:55 IST)

அடையாறு ஆற்றில் குளிக்கவோ வேடிக்கை பார்க்கவோ வேண்டாம் : சென்னை கலெக்டர்

பொதுமக்கள் அடையாறு கூவம் ஆற்றில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ வேண்டாம் என்று சென்னை கலெக்டர் சுந்தரவல்லி அறிவுறுத்தியுள்ளார்.


 
 
சமீபத்தில் சென்னையில் பெய்த கனமழை காரணமாக, கூவம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல வருடங்களுக்கு பிறகு சென்னை கூவம் ஆற்றில் வெள்ளம் ஓடுவதால், சென்னை வாசிகள், ஆங்காங்கே பாலத்தின் மீது நின்று வேடிக்கை பார்த்த வண்ணம் உள்ளனர்.
 
இந்நிலையில், பாதுகாப்பு கருதி சென்னையில் உள்ள அடையாறு, பக்கிம் கால்வாய் ஆகிய பகுதிகளில் ஓடும் கூவம் நதியின் அருகில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும், கூவம் ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி அறிவுறுத்தியுள்ளார்.