வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2017 (15:37 IST)

சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு ; பிடியை நெருக்கும் சிபிஐ ; சிக்கலில் நடராஜன்

வெளிநாட்டிலிருந்து சொகுசு கார் வாங்கியது தொடர்பான வழக்கை விரைவில் முடிக்க கோடி, சென்னை உயரீந்திமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. இது சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
1994ம் ஆண்டு, லண்டனில் இருந்து புத்தம் புதிய லெக்ஸஸ் காரை நடராஜன் இறக்குமதி செய்தார். அதை தனது தமிழரசி பப்ளிகேஷன் நிறுவனம் சார்பில் அவர் வாங்கியிருந்தார். 3 ஆயிரம் சி.சி. என்ஜின் திறன் கொண்ட அந்த கார் பல கோடி மதிப்புடையது. ஆனால், அந்த கார் 1993ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டதாகவும், ஏற்கனவே பயன்படுத்தபப்ட்ட கார் என காரின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
இதில் சந்தேகம் அடைந்த சுங்கத் துறையினர் நடத்திய விசாரணையில், அந்த கார் 1994ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட புதிய கார் என்பதும், வரி ஏய்ப்பு செய்வதற்காக, போலி ஆவணங்களை தயாரித்து நடராஜன் கொடுத்திருந்தது தெரியவந்தது. இதன் மூலம், அரசுக்கு 1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரத்து 412 ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சுங்கத் துறை அவர் மீது குற்றம் சாட்டியது. மேலும், நடராஜன், தமிழரசு பப்ளிகேஷன் நிர்வாகி வி.என்.பாஸ்கரன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த சில அதிகாரிகள் மீது சுங்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. அதன்பின் இந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. 
 
இந்த வழக்கு கடந்த 20 வருடங்களாக நடைபெற்று வந்தது. அதன் பின் கடந்த 2010ம் ஆண்டு நீதிபதி அளித்த தீர்ப்பில், நடராஜன் உட்பட அனைவருக்கும் தலா 2 வருடம் சிறைத்தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த வழக்கை எதிர்த்து நடராஜன் உட்ப 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. மேலும், அவர்களுக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. அதன் பின் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. 
 
அந்நிலையில் அந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என நடராஜன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் கடந்த 2012ம் ஆண்டு குற்றப்பிரிவ்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. மேலும், வருகிற பிப்ரவரி 2ம் தேதி இந்த வழக்கின் விசாரணை மீண்டும் துவங்கும் என தீர்ப்பளித்தது.  
 
ஆனால், அந்த வழக்கின் மீதான விசாரணை துவங்கப்படவில்லை. எனவே இந்த வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருகிற 27ம் தேதிக்கு இந்த வழக்கை நீதிபதி பாஸ்கர் ஒத்தி வைத்தார். 
 
ஏற்கனவே, சொத்துக்குவிப்பு வழக்கில் நடராஜனின் மனைவி சசிகலா தண்டனை பெற்று சிறையில் இருக்கும் வேளையில், இந்த வழக்கின் தீர்ப்பு நடராஜனுக்கு பாதகமாக அமைந்தால், அவரும் சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது..