1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (14:56 IST)

பாஜகவுல சேர்ந்த நேரம்... அண்ணாமலை மீது கேஸ்!!

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உட்பட பாஜகவினர் 5 பேர் மீது வழக்குப் பதிவு.
 
தமிழகத்தை சேர்ந்தவரான அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பணிபுரிந்து வந்த நிலையில் சமீபத்தில் தனது பணியை விடுத்து தற்சாற்பு விவசாயம் செய்ய தொடங்கினார். அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். 
 
இந்நிலையில் அவர் மீது கோவை காட்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பாஜக இணைப்பு நிகழ்ச்சியின் போது தனிநபர் இடைவெளியை பின்பற்றவில்லை என கொரோனா தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.