1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh

கடைகளை இடித்து நொறுக்கிய பேருந்து!

விழுப்புரத்தில் இருந்து கடலூர் நோக்கி ஒரு தனியார் பேருந்து புறப்பட்டது.


 
 
இந்நிலையில், அதிவேகமாக வந்த அப்பேருந்து, நெல்லிக்குப்பம் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து, தாறுமாறாக ஓடியதை அங்கு இருந்த கடைகளை சேதப்படுத்தி விட்டு, நின்றது.
 
இந்த கோர விபத்தில் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், வியாபாரிகள் உட்பட சுமார் 30 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.