1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 20 ஜூலை 2016 (11:00 IST)

நண்பனுடன் சேர்ந்து காதலியை பலாத்காரம் செய்த 17 வயதான காதலன்

நெல்லை அருகே நாங்குநேரியில் 15 வயதான மாணவி ஒருவரை 17 வயதான மாணவன் ஒருவன், அவரது நண்பர் மற்றும் ஆட்டோ டிரைவர் உடன் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த பாதிக்கப்பட்ட அந்த சிறுமியும், மாணவன் ஒருவனும் காதலித்து வந்தனர். சம்பவம் நடந்த அன்று அந்த மாணவி தனது காதலனுக்கு போன் செய்துள்ளார். அப்போது அந்த மாணவியை தனது வீட்டின் அருகே உள்ள ஒரு இடத்துக்கு வர சொல்லி இருக்கிறார்.
 
வீட்டில் பொய் சொல்லி விட்டு காதலனை பார்க்க வந்தார் அவர். அப்பொழுது அவர் தனது நண்பர் மற்றும் ஆட்டோ டிரைவர் ஒருவருடன் நின்றுகொண்டிருப்பதை பார்த்த மாணவி அதிர்ச்சியடைந்து வீட்டுக்கு திரும்ப முயற்சித்துள்ளார்.
 
ஆனால் அவர்கள் மாணவியை மடக்கி பிடித்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கொண்டு சென்று ஒருவர் பின் ஒருவராக பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் வீடு திரும்பிய அந்த மாணவி நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
 
இதனை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் அவமானமாகி விடும் என்று எண்ணி, நடந்த சமபவத்தை அந்த மாணவனின் பெற்றோரிடம் கூறி அவரையே தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க கோரிக்கை வைத்தனர்.
 
ஆனால் அந்த மாணவியை காதலித்து, நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த அந்த மாணவன் திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
 
உடனடியாக வழக்கு பதிவு செய்த காவல்துறை காதலித்து ஏமாற்றிய மாணவனையும், அவனது நண்பனையும் கைது செய்தனர். இந்த பலாத்காரத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி ஆட்டோ டிரைவர் தலைமறைவாகி உள்ளார். அவரை காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.