வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 17 டிசம்பர் 2016 (20:34 IST)

பாஜகவினர் கூறுவது பொய் - ராமதாஸ் அதிரடி

தமிழகத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று பாஜகவினர் கூறுவது பொய்யானது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


 

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்த ராமதாஸ் இது குறித்து, செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஜல்லிக்கட்டு விஷயத்தில், மத்திய – மாநில அரசுகளின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை என்பதால், இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது கேள்விக்குறிதான் என்று கூறியிருந்தார்.

மேலும், அவர் தெரிவிக்கையில், ”வங்கியில் நிலவும் பணப் பரிவர்த்தனையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்” என்றும் கூறியுள்ளார்.