1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 7 ஜூன் 2021 (08:09 IST)

வங்கிகள் இயங்கும் நேரம்! இன்று முதல் புதிய அறிவிப்பு

வங்கிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வை தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு தளர்வு ஜுன் 14 ஆம் தேதி வரை அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த புதிய ஊரடங்கில் வங்கிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கி பரிவர்த்தனைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளன.