வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2016 (09:05 IST)

வங்கி ஊழியரின் வெறியாட்டம்: பொதுமக்களை நடத்தும் விதத்தை பாருங்கள் (வீடியோ இணைப்பு)

வங்கி ஊழியரின் வெறியாட்டம்: பொதுமக்களை நடத்தும் விதத்தை பாருங்கள் (வீடியோ இணைப்பு)

கருப்பு பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிப்பதாக கூறி 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது அரசு. அதிலிருந்து நாடு முழுவதும் மக்கள் வக்கிகளில் அலை மோதுகின்றனர்.


 
 
வங்கிகளில் பணம் இல்லாததால் சில இடங்களில் வங்கிகள் பொதுமக்களால் சூறையாடப்பட்ட சம்பவங்களும் நடந்தன. ஆனால் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வங்கி ஓழியர் ஒருவர் வெறிபிடித்தது போல ஒரு பெண்ணிடம் கத்துவது வீடியோவாக வந்துள்ளது.
 
சென்னை பெரம்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஒன்றில் தான் பொதுமக்களிடம் வங்கி ஊழியர் அநாகரிகமாக சத்தம் போட்ட சம்பவம் நடந்துள்ளது. வங்கியில் பணம் தீர்ந்துவிட்டதாக கூறும் அவர்கள் பொதுமக்களின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டியது கடமை.

 

நன்றி: சற்றுமுன்
 
ஆனால் கேள்வி கேட்கும் ஒரு பெண்ணிடம் சத்தம் போடுவது அநாகரிகமானது. இதனை பார்க்கும் போதே அறுவறுப்பாக உள்ளது. அந்த ஊழியரிடம் கேள்வி கேட்கும் ஒவ்வொருவரிடமும் காட்டு கத்து கத்துகிறார் ஒருமையில் பேசுகிறார் அவர்.