ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (19:14 IST)

நெல்லை கண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி !

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெல்லை கண்ணன், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். 
இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து நெல்லை கண்ணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல காவல்துறை அலுவலகங்களில் புகார்கள் செய்யப்பட்டன. இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
இதனைத் தொடர்ந்து, நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்ய வேண்டுமென தமிழக பாஜக சென்னையில் நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அதையடுத்து நேற்று முன் தினம்  இரவு 9 மணியளவில் பெரம்பலூரில் வைத்து நெல்லை கண்ணனை  போலிஸார் கைது செய்தனர்.
 
இந்நிலையில், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நெல்லைக் கண்ணனை வரும் 13 ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
 
 பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவதூறாகப் பேசிய வழக்கில்  இன்று நெல்லை கண்ணனின் ஜாமீன் மனுவை  நெல்லை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.