1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 27 அக்டோபர் 2016 (08:22 IST)

வேஷம் போட்ட கோமாளி வைகோ: திமுக கவிஞரின் சர்ச்சை பதிவு!

வேஷம் போட்ட கோமாளி வைகோ: திமுக கவிஞரின் சர்ச்சை பதிவு!

காவிரி விவகாரத்தில் சமீபத்தில் திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் மக்கள் நல கூட்டணி கலந்து கொள்ளவில்லை. கலந்துகொள்ளலாம் என இருந்த விசிகவும் கடைசி நேரத்தில் கலந்துகொள்ளவில்லை. இது திமுகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.


 
 
இதற்கு முக்கிய காரணம் வைகோ தான் என சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் பேசப்பட்டது. இந்நிலையில் திமுகவை சேர்ந்த பிரபல கவிஞர் ராஜாத்தி சல்மா தனது ஃபேஸ்புக்கில் வைகோவை விமர்சித்து நீண்ட கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 
அது கொஞ்சம் கூட அரசியல் நாகரிகம் இல்லாமல் மிகவும் மோசமாக உள்ளது. அந்த கவிதையின் தொடக்கத்திலேயே அவர் இது நான் எழுதியதில்லை என கூறிதான் அந்த கவிதையை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் ஒரு மூத்த அரசியல் தலைவரை மூன்றாம் தர வார்த்தைகளால் அர்ச்சிப்பது மற்ற கட்சியில் உள்ள குறிப்பாக எழுத்து பணியில் உள்ளவர்களுக்கு சிறப்பல்ல என பேசப்படுகிறது.
 
அந்த கவிதை நீங்கள் எழுதவில்லை என்றாலும், இது போன்ற கவிதைகள ஆதரிக்கும் விதமாக அதனை தனது முகநூலில் பதிவிடுவதும் தவறுதான் என சமூக வலைதளத்தில் பேசப்படுகிறது.
 
இது தான் அந்த கவிதை:-
 
இது நான் எழுதியதல்ல
 
வைகோ என்னாச்சி வைகோ ****
 
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு 
அனைத்து கட்சி கூட்டம் பார்த்து அலறுறீங்க
அடி வயிற்றில் கை வைத்து பதறுறீங்க
விவசாயிக்காக கூட்டம் கூட்டுவது தப்பா வைகோ
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு
 
பச்சை தலைப்பாகையும் கருப்பு தூண்டுமாய் அலைந்தீர்கள்
பருப்பு வேகாமல் பாதியிலேயே கழட்டினீர்கள்
வல்வெட்டித்துரைப்பற்றி பேசினீர்கள் அங்கே
வாழாவெட்டியாய் பலரை ஆக்கினீர்கள்
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு
 
பிரபாகரனை பற்றி பேசினீர்கள்
பரிதாபமாக அவரை மாற்றினீர்கள்
கூடங்குளம் பற்றி கொந்தளித்தீர்கள்
கூட நிற்காமலேயே வந்துவிட்டீர்கள்
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு
 
மோடி கூட நின்னு ஜோரா முழங்கினீர்கள்
மோசம் போயி விட்டதாக புலம்புனீர்கள்
மோஷன் போன சிறுவனைப்போல கதறுறீங்க
வேஷம் போட்ட கோமாளியாய் பதறுறீங்க
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு
 
விஜயகாந்தை முதலமைச்சரான அறிவிச்சீங்க
இருக்கும்வரை ஜெயாதான் முதல்வர் என்று கூவுறீங்க
எதிர்க்கட்சி தலைவரா இருந்தவரை
எதிர்காலம் இல்லாமல் ஆக்கிடீங்க
பிரேமலதா பின்னாலே நின்று நீங்க
பிணம்தின்னி கழுகாக மாறுனீங்க
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு
 
வாசனையும் கூட்டிவந்து சுத்துனீங்க
வாசமில்லா மலராக ஆக்கினீங்க
மோசம் போன வாசனுமே வந்துட்டாரு
வேஷம் போட்ட நீங்க மட்டும் நிக்கிறீங்க
கோசம் போட ஆளில்லாம சொக்குறீங்க
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு
 
சேர்ந்தவங்க அனைவரையும் முடிச்சிடீங்க
செல்லாக்காசா நீங்க இப்ப ஆயிடீங்க
காலம் போன காலத்துல வேஷம் வேண்டாம்
கலைஞரின் கரத்தை நீங்க உதர வேண்டாம்
மன நல கூட்டணியும் தேறாது
மன உளைச்சல் எந்நாளும் ஆகாது
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு.