1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (15:31 IST)

த்ரிஷாவை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஏ.வி.ராஜூ அனுப்பிய நோட்டீஸ்: பெரும் பரபரப்பு..!

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் ஏ.வி.ராஜூ திடீரென நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுகவிலிருந்து ஏவி ராஜு நீக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது. அதன் பின்னர் அவர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

அப்போதுதான் அவர் போகிற போக்கில் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தார் என்பது, அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தன்னை அதிமுகவிலிருந்து நீக்கிய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏவி ராஜு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்றும்,  உடனடியாக தன்னுடைய நீக்கத்தை திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு அதிமுக தரப்பில் இருந்து என்ன ரியாக்ஷன் வருகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Siva