1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 நவம்பர் 2021 (19:04 IST)

11 மாவட்டங்களில் பாஜக ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை அறிவிப்பு!

11 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 5 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நவம்பர் 19ஆம் தேதி 11 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிவித்துள்ளார் 
 
இந்த ஆர்ப்பாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணத்தை அறிவித்துள்ள நிலையில் விரைவில் பொதுமக்களுக்கும் நிவாரணம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது