1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 28 ஏப்ரல் 2016 (10:24 IST)

கள்ளக்காதல் விவகாரம்: 3 பேரை விஷ ஊசி போட்டு கொலை செய்த ரியல் எஸ்டேட் அதிபர்

சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 பேரை விஷ ஊசி போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. 


 

 
சென்னை ஈஞ்சம்பாக்கம், அனுமன் காலனி பிரதான சாலையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்டீபன். 
 
இவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த பாலாஜி, முருகானந்தம் ஆகியோர் வேலை பார்க்கின்றனர்.
 
கடந்த 4 ஆம் தேதி ஸ்டீபன் வெளியே சென்று மாலையில் வீடு திரும்பினார். அப்போது, அவரது வீட்டின் பீரோவில் இருந்த நகைகள் காணாமல்போயிருந்தது.
 
இது குதுறித்து அவர் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் 120 சவரன் நகை, நில பத்திரங்களை உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறியிருந்தார். 
 
காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், ஸ்டீபன் வீட்டில் வேலை செய்த பாலாஜி மற்றும்  முருகானந்தம் ஆகியோர் சதீஷ்குமார் என்பவருடன் சேர்ந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.
 
இது குறித்து அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், "நாங்கள் திருடியது 40 சவரன் நகை, 2 கை துப்பாக்கி, 5 தோட்டாக்கள் மட்டுமே" என்றும், "வீட்டின் உரிமையாளர் ஸ்டீபன் 3 பேரை விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார். அவரை கைது செய்யுங்கள்" என்றும் கூறினர்.
 
இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஸ்டீபனிடம் விசாரணை நடத்தினர் அப்போது, அனுமதியில்லாமல் கை துப்பாக்கி வைத்திருந்தது தொடர்பாகவும், 3 பேரை விஷ ஊசி போட்டு கொலை செய்யப்படுவது குறித்தும் விசாரித்தனர். இந்த விசாரணையில் பா அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது.
 
ஸ்டீபனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனால், அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதற்கு மனைவியின் சகோதரராகிய ஆயிரம் விளக்கை சேர்ந்த ஜான் பிலோமினன் தான் காரணம் என்று ஸ்டீபன் கருதியுள்ளார்.
 
இதைத் தொடர்ந்து, கடந்த 19ஆம் தேதி ஜான் பிலோமினன் வீட்டிற்குச் சென்ற ஸ்டீபன், யாருக்கும் தெரியாமல் அவருக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார்.
 
ஏற்கனவே, உத்திரமேரூரைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது மனைவியுடன், ஸ்டீபனுக்கு தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்த  ஸ்ரீதர், இருவரையும் கண்டித்துள்ளார். இதனால், கடந்த ஆண்டு மே 17 ஆம் தேதி,  ஸ்ரீதரையும் விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார்.
 
மடிப்பாக்கத்தை சேர்ந்த ஹென்றி என்பவரது மனைவியுடன், அவருக்கு தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்த ஹென்றி, ஸ்டீபனை கண்டித்துள்ளார்.
 
அவரையும் ஸ்டீபன் விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார். இந்த 3 கொலைகளையும், சிலரது உதவியுடன் இயற்கை மரணமாக வழக்கு பதிவு செய்யவைத்துள்ளார்.
 
என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஸ்டீபனை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.