சனி, 21 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 5 மே 2016 (17:25 IST)

சசிகலாவின் கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது: யார் சொல்கிறார் தெரியுமா?

ஜெயலலிதா பொதுச்செயலாளராக உள்ள அதிமுக அவரது தோழி சசிகலாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞராக உள்ள பிவி ஆச்சார்யா கூறியுள்ளார்.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையின் இறுதி வாதம் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கட்டுப்பாட்டில் தான் அதிமுக கட்சி உள்ளது என வாதாடிய ஆச்சார்யா, சசிகலாவின் ஆதிக்கத்தை பற்றி கூறினார்.
 
கட்சியில் மட்டுமில்லாமல் ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டன் வீட்டிலும் சசிகலாவின் அதிகாரமே ஓங்கி இருக்கும் என ஆச்சார்யா கூறினார்.
 
ஜெயலலிதா சட்டவிரோதமாக சேர்த்த பணத்தை சசிகலா மூலம் தான் சட்டப்பூர்வமாக மாற்றுகிறார் என குற்றம் சாட்டிய ஆச்சார்யா, அதற்காக தான் சசிகலாவின் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன என கூறினார்.