செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 10 நவம்பர் 2018 (13:25 IST)

சீ சீ... ஒரு அரசியல்வாதி செய்யும் வேலையா இது? மாணவியை மடிமேல் உட்கார வைத்து...

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாகி வரும் சூழ்நிலையில், ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவர் 2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருச்சியில், ஆழ்வார்தோப்பில் காயிதே மில்லத் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் தற்காலிக பள்ளி தாளாளராக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக செயலாளர் தனது அறையில் மாணவியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 
 
குறிப்பிட்ட நாளன்று, 2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை தனது அறைக்கு அழைத்து மடிமேல் உட்கார வைத்து பாலியல் சீண்டல்களை மேற்கொண்டுள்ளார். பயந்துபோன மாணவி உடனடியாக ஓடிப்போய் தனது பெற்றோர்களிடம் இது குறித்து தெரிவ்கித்துள்ளார். 
 
மாணவி கூறுவதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பும் ஆகியுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் விசாரணைக்கு பின்னர் சலீமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.