1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By கே.என்.வடிவேல்
Last Modified: வியாழன், 17 மார்ச் 2016 (00:17 IST)

அதிமுக அமைச்சர் உதவியாளர் திடீர் கைது

அதிமுக அமைச்சர் உதவியாளர் திடீர் கைது

சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் மூர்த்தியை தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர்.
 

 
நடைபெற உள்ள சட்ட சபை தேர்தலில் போட்டியிட அதிமுகவில் சீட் வாங்கித் தருவதாக கூறி பண வசூல் செய்ததாக, அதிமுக சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் மூர்த்தியை தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர்.

வேலை வாங்கித்தருவதாக பலரிடமும் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார். இந்த விவகாரமும் தற்போது கூடவே சேர்ந்துள்ளதால், இந்த கைது படலம் மிகவேகமாக அரங்கேறியுள்ளதாம்.

இவரிடம் போலீசார் ரகசிய வாக்கு மூலம் பெற்றுவருகின்றனர். இதில், அமை்ச்சர்தகள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தமிழக அதிமுக தேர்தல் பாதை மேலும் சூடுபிடிக்கலாம்.