வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2016 (15:28 IST)

நாடார்களுக்கு துரோகம் செய்த அதிமுக: கொந்தளிக்கும் சசிகலா புஷ்பா!

நாடார்களுக்கு துரோகம் செய்த அதிமுக: கொந்தளிக்கும் சசிகலா புஷ்பா!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா இன்று வெங்கடேஷ் பாண்ணையாரின் நினைவு அஞ்சலி நிகழ்சியில் பங்கேற்க தூத்துக்குடி வந்தார்.


 
 
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுகவை விமர்சித்தார். அதிமுக இன்று தனது உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை அறித்தது.
 
இது குறித்து கூறிய சசிகலா புஷ்பா, சென்னையை தனித் தொகுதியாக அறிவித்து தலித் மக்களை உயர்த்தியிருக்கலாம். மேலும், நாடார் சமுதாயத்திடமிருந்த தூத்துக்குடி மேயர் தொகுதியை தனித் தொகுதியாக அறிவித்து நாடாருக்கும் தலித் மக்களுக்கும் துரோகம் செய்திருக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். சசிகலா புஷ்பா நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.