வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (18:26 IST)

ரஜினி, சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் : பழ. கருப்பையா

நடிகர் ரஜினி மற்றும் கலெக்டர் சகாயாம் போன்றவர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்று பழ. கருப்பையா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
திருப்பூரில் நடைபெற்ற ஒரு புத்தக விழாவில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கலந்து கொண்டு  ‘அரசியல் அறம்’ என்ற தலைப்பில் பேசினார் .  அவர் பேசும் போது “இன்றைக்கு அறம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதனை அறம் உடையவனாக மாற்றியிருந்தால் அவன் ஒழுங்குபட்டிருப்பான். ஆனால் அவனை சட்டத்துக்கு பயப்படுகிறவர்களாகவே உருவாக்கி இருக்கிறோம். 
 
இன்றைக்கு அரசியல் என்பது தொழிலாகிவிட்டது. பதவியை பிடிக்க வேண்டும் என்றுதான் அரசியலுக்கு வருகிறார்கள். லஞ்சம் இன்றைக்கு வாழ்க்கை முறையாகிவிட்டது. நேர்மையான ஒருவன் அரசியலிலிருந்து ஒதுக்கப்படுகிறான். சட்டத்தை சார்ந்து இருக்கும் அரசியில் நிச்சயம் தோற்கும்.
 
ஆனால் அறத்தை தாங்கி நிற்கு அரசியல் என்றும் தோற்காது. அரசியல்வாதிகள் மக்களுக்கு எதையும் உணர்த்துவதில்லை. அதனாலேயே மக்கள் அரசியலை வெறுக்கிறார்கள். மையப்படுத்தி ஊழல் செய்யும் முறையை அதிமுகவினர் கண்டுபிடித்துள்ளனர்” என்று பேசினார்.
 
அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது “அரசியலில் அடுத்து என்ன செய்வது என்று நன்றாக யோசித்த பின்பே முடிவெடுப்பேன். என் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்களை தப்ப விட்டு விட்டனர். 
 
நடிகர் ரஜினிகாந்த், கலெக்டர் சகாயம் போன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். ஆனால் ஏன் மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை” என்று கூறினார்.