செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 18 பிப்ரவரி 2017 (09:26 IST)

வெல்லப் போவது மக்களின் மந்திரமா? இல்லை தந்திரமா? - கமல்ஹாசன் டிவிட்

தமிழக முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று  தமிழக சட்டசபையில் இன்று தனது பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.


 

 
பரபரப்பான அரசியல் சம்பவங்களுக்கு அடுத்து ஒருவழியாக எடப்பாடி தமிழக முதல்வராக ஆளுநர் அறிவித்தார். மேலும், 15 நாட்களுக்குள் அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், உடனாடியாக தனது பலத்தை நிரூபிக்க முடிவெடுத்த எடப்பாடி தரப்பு இன்று கூடம் சட்டபையில் பெரும்பான்மையை நீருபிக்க உள்ளது.
 
சசிகலா தரப்பில் நிறுத்தப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு இல்லை எனத் தெரிகிறது.. எனவேதான், அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள்  மனசாட்சி படியும், மக்களின் மனநிலை புரிந்தும் வாக்களிக்க வேண்டும் என அவருக்கு எதிரான ஓ.பி.எஸ் அணி கோரிக்கை வைத்துள்ளது.
 
இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் “ இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.