வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 29 ஜூலை 2015 (14:51 IST)

அப்துல் கலாம் இறுதிச் சடங்கு: தமிழகம், புதுச்சேரிக்கு பொது விடுமுறை

அப்துல் கலாம் இறுதிச் சடங்கு நாளை நடைபெறவுள்ளதை ஒட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அப்துல் கலாம் இறுதிச் சடங்கு ராமேஸ்வரத்தில் நாளை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இதையொட்டி தமிழக அரசு நாளை பொது விடுமுறை அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் புதுச்சேரியிலும் நாளை பொது விடுமுறை விடப்படுவதாக, அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
 
இது குறித்து ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் இழப்பு நாட்டுக்கே பேரிழப்பு. அவர் உடல் அடக்கம் நாளை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் நாளை பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
 
அதன்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு, அரசுதுறை சார்பு நிறுவனங்கள் இயங்காது. இவ்வாறு ரங்கசாமி கூறினார்.