1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 15 நவம்பர் 2018 (10:58 IST)

உல்லாசத்திற்கு வர மறுத்த அண்ணி: போட்டுத்தள்ளிய கொழுந்தன்

ஈரோட்டில் உல்லாசத்திற்கு வர மறுத்த அண்ணியை கொழுந்தன் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கள்ளக்காதல்களும் அதனால் ஏற்படும் கொலைகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
 
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் தனது கணவருடன் தன் தங்கச்சி வீட்டில் வசித்து வந்தார். இவரது தங்கையின் கணவர் வேலுச்சாமி.
 
வேலுச்சாமிக்கும் முத்துலட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாய் இருந்துள்ளனர்.
 
சமீபத்தில் வேலுச்சாமி முத்துலட்சுமியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த வேலுச்சாமி முத்துலட்சுமியை கழுத்தை நெரித்து கொன்று அவரது உடலை பாலத்தில் வீசிச் சென்றார்.
 
இந்நிலையில் முத்துலட்சுமியின் உடலை மீட்ட போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் தன்னை நெருங்கி விடுவார்களோ என பயந்த வேலுச்சாமி தானாக போலீஸில் சரண்டைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.