வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (10:21 IST)

காதலை ஏற்க மறுத்ததால் தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி உயிரிழப்பு

மதுரையை சேர்ந்த கொடூரன் ஒருவன் தன்னை காதலிக்க மறுத்த மாணவியை தீ வைத்து கொளுத்தினான். இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையைச் சேர்ந்தவர் மணிப்பாண்டி. இவரது மகள் சித்ராதேவி (14). அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். பாலமுருகன்(25)  என்பவன் சித்ராதேவியிடம் தன்னை  காதலிக்குமாறு  தொந்தரவு செய்து வந்துள்ளான்.
 
இதுகுறித்து சித்ராதேவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பாலமுருகைனை கைது செய்த போலீஸார் அவனை சிறையில் அடைத்தனர்.
 
இதனையடுத்து ஜாமீனில் வெளிவந்த பாலமுருகன், சித்ராதேவி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளான். இதில் படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொடூரன் பாலமுருகனை கைது செய்த போலீஸார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.