செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 21 ஏப்ரல் 2018 (12:57 IST)

15 வயது சிறுவனை கடத்தி சென்று குடும்பம் நடத்திய 22 வயது பெண் கைது

தருமபுரியில்  22 வயது பெண் ஒருவர் 15 வயது சிறுவனை கடத்தி சென்று குடும்பம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் வேட்டகட்டமவுடு பகுதியை சேர்ந்தவர் தசரதன். தசரதனின் மகன் அருகிலுள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். தசரதனின் உறவினர் மகளான வேலம்மாளுக்கு(22), தசரதனின் மகனோடு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இதனையறிந்த தசரதன் வேலம்மாலைக் கண்டித்துள்ளார்.
 
இந்நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகன் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தசரதன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் நடத்திய விசாரனையில் ஓடி போன இருவரும் பெங்களூருவில் தங்கி குடும்பம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களை மீட்ட போலீஸார், மாணவனை குழந்தைகள் நலக் காப்பகத்தில் அனுமதித்தனர். மேலும் சிறுவனை கடத்தி குடும்பம் நடத்திய வேலம்மாலை போலீஸார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.