1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (10:42 IST)

நடிகை வனிதாவுடன் தங்கியிருந்த 8 பேர் திடீர் கைது

நடிகர் விஜயகுமார் நேற்று மதுரவாயல் காவல்நிலையத்தில் தனது மகளும் நடிகையுமான வனிதா மீது புகார் ஒன்றை கொடுத்திருந்தார்;. இந்த புகாரில் படப்பிடிப்புக்காக தனது வீட்டை வாடகைக்கு எடுத்த வனிதா, காலி செய்ய மறுப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த புகார் மனுவை அடுத்து போலீசார் வனிதாவை அழைத்து நேற்று விசாரணை செய்தனர். இந்த நிலையில் வீட்டை காலி செய்ய போலீசாரிடம் வனிதா மறுத்ததாக தெரிகிறது

இதனையடுத்து நடிகர் விஜயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகை வனிதா மீது வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வனிதாவை வீட்டில் இருந்து வெளியேற்றிய போலீசார் அவருடன் தங்கியிருந்த அவருடைய நண்பர்களான 8 பேர்களை கைது செய்தனர்.