1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (19:04 IST)

7 கோடி மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

சென்னை மணலி அருகே ரூ.7 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


 

 
சென்னை மணலி அருகேயுள்ள கண்டெய்னர் யார்டில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். சோதனையில் பிளைவுட் சீட்டுகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் சிக்கின.
 
சுமார் 700 பெட்டி சிகரெட்டுகள் சிக்கியுள்ளன. அந்த சிகரெட்டுகள் இந்திய ரூபாய்க்கு ரூ.7 கோடி மதிப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
 
இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த இந்த சிகரெட்கள், சிங்கப்பூர் நாட்டிலிருந்து சென்னைக்கு இறக்குமதியானதாக தெரியவந்துள்ளது. இறக்குமதி செய்யும் நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.