வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 26 செப்டம்பர் 2016 (10:20 IST)

ஒரே நாளில் 450 பேர் கைது: சென்னையில் அதிரடி வேட்டை!

ஒரே நாளில் 450 பேர் கைது: சென்னையில் அதிரடி வேட்டை!

தலைநகர் சென்னையில் பெருகிவரும் குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக ஒரே நாளில் 450 பேரை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.


 
 
சமீபகாலமாக சென்னையில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களை தடுக்க சென்னை காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் போலீஸார் பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
 
கண்காணிப்பு மற்றும் இரவு நேர ரோந்து பணியும் காவல்துறையினர் தற்போது தீவிரபடுத்தியுள்ளனர். சென்னை முழுவதும் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனை மற்றும் தங்கும் விடுதிகளில் நடத்திய சோதனையில் சந்தேகத்தின் அடிப்படையில் மொத்தம் 387 பேரையும், குற்ற பின்னணி கொண்ட 3 ரவுடிகளையும் கைது செய்துள்ளனர். மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 60 பேரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.