தருமபுரி அருகே கார் விபத்தில் 1 குழந்தை உட்பட 4 பலி-வீடியோ இணைப்பு
tதர்மபுரி அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
தருமபுரி பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை குண்டல்பட்டி அருகே பெங்களுரை சேர்ந்தவர்கள் 11பேர் காரில் வேளங்கன்னிக்கு சென்றனர். அப்போது முன்னே சென்ற வாகனத்தை முந்திசென்றபோது நிலை தடுமாறிய கார் கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த 3 பெண்கள் 1 குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் தருமபுரி மருத்துவக்கல்லுரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.