1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: ஞாயிறு, 12 ஜனவரி 2020 (13:40 IST)

பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு கிளம்பிய 2 லட்சம் பேர்..

கடந்த 2 நாட்களுக்குள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 லட்சத்துக்கு அதிகமானோர் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆம் தேதியிலிருந்து பொங்கல் பண்டிகைய முன்னிட்டு சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டுமே 2,01,845 பயணிகள் பொங்கல் முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணித்திருப்பதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து மேலும் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.