1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (15:12 IST)

மாந்தோப்பில் 5 நாள் வைத்து சீரழிப்பு: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; மனிதமிருகங்களின் வெறிச்செயல்!!

திருவள்ளூரில் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் பலரை பதைபதைக்க வைத்துள்ளது.
 
திருவள்ளூர் மாவட்டம்  புதுவெங்கடாபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள்தான் சரிதா(15). சரிதா பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். 
 
இந்நிலையில் சரிதா 2018-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி காணாமல் போனார். இதுகுறித்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீஸார் சிறுமியை தேடுவதில் மெத்தனம் காட்டி வந்துள்ளனர்.
 
இதையடுத்து மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறுமியை விரைவில் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டது. அதன்பின்னரே தேடுதல்வேட்டை முடுக்கிவிடப்பட்டது.
அப்போது சிறுமியின் வீட்டருகே உள்ள தோட்டத்தில் ஒரு மனித எலும்புக்கூடு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் அங்கிருந்த எலும்புக்கூடை பார்த்தபோது அதில் ஒரு ஸ்கூல் யூனிஃபார்ம் இருந்தது.  பின்னர் போலீஸார் அந்த எலும்புக்கூடை தடயவியல் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் அது சிறுமி சரிதா என உறுதிப்படுத்தப்பட்டது.
 
இதற்கிடையே போலீஸார் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த சங்கரய்யா(20), என்பவனை பிடித்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. சங்கரய்யா சரிதாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். இதனை அவன் சரிதாவிடமும் கூறியுள்ளான். ஆனால் சரிதா இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவ்வபோது சிறுமியிடம் அத்துமீறியும் உள்ளான்.
 
இதனை சிறுமி தனது பெற்றோரிடன் கூறவில்லை. இது தான் பிரச்சனையின் மூலகாரணமே. கடந்த செப்டம்பர் 7-ம் தேதி ஒரு கரும்பு தோப்பின் வழியாக பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த சரிதாவை சங்கரய்யா வழிமறித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். அப்போது அதனை அந்த தோப்பின் உரிமையாளர் நாதமுனியும், அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தியும் பார்த்துள்ளனர்.
அவர்கள் சங்கரய்யாவை அழைத்து, சிறுமியை எங்களிடம் விட்டுசெல், உனக்கு 5000 ரூபாய் தருகிறோம் என கூறியுள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட அவன், சரிதாவை அவர்களிடன் விட்டு சென்றுள்ளான். அந்த இரு மனித மிருகங்களும் 5 நாட்கள் சரிதாவை நாசம் செய்துள்ளனர். இறுதியில் சிறுமி இறந்து போனார்.
 
பின்னர் அந்த இரு அயோக்கியன்களும் சேர்ந்து சிறுமியை புதைத்துவிட்டு சென்றுள்ளனர். தற்போது இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சங்கரய்யா, நாதமுனி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூன்று அயோக்கியன்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவன்களை மாதிரியான ஆட்களுக்கு கொடூரத்திலும் கொடூரமான தண்டனை வழங்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.