1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2024 (11:24 IST)

சென்னையில் 102 டிகிரி வெயில்.. 14 இடங்களில் சதம்..! – வெப்ப அலையில் அவதியுறும் மக்கள்!

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இன்று பல பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது.



மார்ச் இறுதி முதலாக கோடை வெப்பம் அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பம் வாட்டி வருகிறது. ஏப்ரல் தொடக்கமே இப்படி என்றால் மே மாதம் எல்லாம் என்ன ஆகும் என மக்கள் அயற்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று தமிழ்நாட்டின் 14 பகுதிகளில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி வெயிலும், சென்னையில் 102 டிகிரி வெயிலும் வாட்டி வருகிறது.


இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வளிமண்டல கீழடுக்கு காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 7ம் தேதி வரை பெருவாரியான பகுதிகளில் வறண்ட வானிலையும், ஏப்ரல் 8,9ல் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K