1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 1 மே 2018 (09:12 IST)

மதுரை இந்தியன் வங்கியில் 10 லட்சம் கொள்ளை

மதுரையில் இந்தியன் வங்கியில் ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் விளக்குத்தூண் பகுதியில் இந்தியன் வங்கியின் கிளை செயல்பட்டு வந்தது. இவ்வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று வங்கியின் மாடியில் ஊழியர் ஒருவரின் பணி ஓய்வை முன்னிட்டு பாராட்டு நடைபெற்றது. இவ்விழாவில் சக ஊழியர்கள் பங்கேற்றனர்.
இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் காசாளர் அறையில் இருந்து ரூ.10 லட்சம் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.