வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சில வகை மூலிகை பொடிகளும் அதன் பயன்களும் !!

முருஙகைவிதை பொடி - இது சமீப காலமாக அதிக அளவில் பேசப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கொடுக்க கூடியது. அது மட்டுமல்லாது ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி - உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.
 
வாதநாராயணன் பொடி - வாத நோய்களுக்கான நிவாரணி. அனைத்து விதமான பக்கவாதம், கை, கால் மூட்டு வலிக்கு ஏற்றது.
 
பாகற்காய்  பொடி - உடலில் உள்ள கிருமிகள், புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. உடலில் உள்ள இன்சுலின் அளவை சமன் படுத்த கூடியது.
 
வாழைத்தண்டு பொடி - எல்லா விதமான சிறுநீரக பிரச்சனைகள், சிறுநீரக கோளாறு, சிறுநீரக கல் அனைத்திற்கும் மிகச் சிறந்தது.
 
சித்தரத்தை பொடி - நாள் பட்ட சளி, இருமல் போன்றவற்றை நிக்க கூடியது. சற்று காட்டமாக இருப்பதால் தேனுடன் கலந்து சாப்பிடலாம். வாயு கோளாறுகளுக்கு  நல்லது.
 
பொடுதலை பொடி -  பெயரை பார்த்தவுடன் புரிந்திருக்கும், ஆம் இது பொடுகு தொல்லை, பேன் தொல்லை,  முடி உதிரிவதை தடுக்கும்.
 
சுக்கு பொடி - சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை எனபர்கள். நம் உடலில் உண்டாகும் அஜீரணம், போன்ற பிரச்சனைகளை தீர்த்து செரிமானம் ஒழுங்காக நடைபெறும்.
 
ஆடாதொடை பொடி - சுவாச கோளாறு, ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் ஆடாதொடை பொடியினை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல மாற்றம் தெரியும்.
 
கருஞ்சீரகப்பொடி - நீரழிவு நோய், குடல் புண் போன்றவை நீங்கும்.
 
வெட்டி வேர் பொடி - தினமும் நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு படிப்படியாக குறைந்து குளிர்ச்சி தரும். இந்த நீரில் குளித்து வந்தால் வேர்க்குரு, வேர்வை வாடை  வரத்து. நல்ல முழுவதும் புத்துணர்ச்சி தரும்.