1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கோடை காலத்தில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை விரட்ட....!

கோடை காலத்தில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை விரட்ட, இயற்கை முறைகளின் மூலம் தீர்வு காணலாம். வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றத்தை எளிதில்  விரட்டலாம்.
கோடை வெப்பத்தால் உடலில் இருந்து வியர்வை அதிகம் வெளியேறும். எனவே நாம் மிகவும்சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் வியர்வை துர்நாற்றத்தினால் யாரும் உங்கல் அருகில் கூட வரமாட்டார்கள்.
 
1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அதை அக்குளில் தடவி சில நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
 
ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சு உருண்டையில் நனைத்து, அதை அக்குளில் தடவி 2 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்தால்  பலன் கிடைக்கும்.
தினமும் குளிக்கும் முன் ஒரு துண்டு எலுமிச்சயை அக்குளில் தேய்த்து அது நன்கு காய்ந்த பின்பு குளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் உடல் துர்நாற்றம் விரைவில் மறையும்.
 
சந்தன பவுடரை எடுத்து அதில் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி நன்கு காய வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து  வர வியர்வை நாற்றம் மற்றும் அக்குளில் உள்ள கருமை நீங்கும்.