வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

காய்கறிகளில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்

காய்கறிகளில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்

1. முட்டைகோஸ்
 
முட்டைகோஸை ஜூஸ் போட்டு குடித்தால் அல்சர் குணமாகும். உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட வேண்டும். முட்டைகோஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இவை செரிமான மண்ட‌லத்தை சீராக இயக்கி மலச்சிக்கல் பிரச்‌சனையை குணமாக்கும். மேலும் உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய் ஆகியவற்றை குணப்படுத்தும். காலையில் தினமும் வெறும் வயிற்றில் பருகினால் உடல் கொழுப்பு கரையும்.

 
2. பாகற்காய்
 
நரம்புகள் வீரியம் பெறும். விஷம் முறியும். வயிற்றுப்பூச்சிகள், புழுக்கள் அழியும். மூலவியாதி, கல் அடைப்பு சரியாகும். பாதரச முறிவாகப் பயன்படுகிறது. நீரிழிவுப் பிணியாளர்களின் அதி அற்புத மருந்து. கல்லீரல் வீக்கம் சரியாகும். பிற மருந்துகள் சாப்பிடுபவர்கள் இயற்கை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பாகற்காய் சாப்பிடலாம்.
 
3. முள்ளங்கி
 
முள்ளங்கிக் கிழங்கு சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும். இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும். சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும். முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரகக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும். இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.
 
4. சுரைக்காய்
 
பெண்களுக்கு பால் சுரப்பில் நல்ல பலன் தரும். உடல்சூடு, மலச்சிக்கல், வயிற்றுவலி, வயிற்றுப் புண் சரியாகும். உடல் குளிர்ச்சி பெறும். மூல வியாதி விலகும். இரத்தம் சுத்தமடைந்து சிறுநீர் எரிச்சல் நீங்கும். உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவைகளுக்கு அருமையான மருந்து. உடல் பருமன், அதிக கொழுப்பு இவைகளுக்கு சுரைக்காய் சாறு அருந்த வேண்டும்.
 
5. பீ‌ன்‌ஸ்
 
பீ‌ன்‌ஸ் அவரை வகையை‌ச் சே‌ர்‌ந்த ‌பீ‌ன்‌ஸ் ‌நீ‌ரி‌ழிவு ம‌ற்று‌ம் இதய ‌வியா‌தி‌யி‌ன் ‌தீ‌விர‌த்தை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் த‌ன்மை கொ‌ண்டதாக உ‌ள்ளது. தொட‌ர்‌ந்து சோயா‌பீ‌ன்‌ஸ் உணவுகளை‌ச் சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தால் அது கொழு‌ப்பை‌க் குறை‌ப்பதுட‌ன், ர‌த்த‌த்‌தி‌ல் குளு‌க்கோ‌சி‌ன் அளவையு‌ம் க‌ட்டு‌‌க்கு‌ள் வை‌த்‌திரு‌க்‌கிறது என தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது. ‌பீ‌ன்‌ஸ் எ‌வ்வாறு ‌நீ‌ரி‌ழிவையு‌ம், இதய நோயையு‌ம் க‌ட்டு‌ப்படு‌த்து‌கிறது எ‌ன்று த‌ற்போதுதா‌ன் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது. அதாவது, ‌பீ‌ன்‌சில் இசோ‌பிளவோ‌ன்‌ஸ் என‌ப்படு‌ம் உ‌யி‌ர்‌‌த்தாது‌க்க‌ள் உ‌ள்ளன.
 
6. சுண்டைக் காய்
 
சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும். சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.