1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

இயற்கை மருத்துவத்தில் அருகம்புல்லின் பயன்கள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி  நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.
பலன்கள்:
 
* நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். இரத்த அழுத்தம் குணமாகும்.
 
* வயிற்றுப் புண் குணமாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
 
* சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும். நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
 
* மலச்சிக்கல் நீங்கும். புற்று நோய்க்கு நல்ல மருந்து.
 
* உடல் இளைக்க உதவும். இரவில் நல்ல தூக்கம் வரும்.
 
* பல், ஈறு கோளாறுகள் நீங்கும். மூட்டு வலி நீங்கும். கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.