வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நன்மையா? தீமையா?

பழங்களை சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது கூடாது. பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும். அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின்  மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

 
பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான  உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது. உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால், வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது.
 
நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது  இவையெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்து கொள்ளாததுதான்.
 
நீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, 'புதிதான' பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கட் மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள் வேண்டாம். சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம்.
 
பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களில் உள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன. உங்களுக்கு அதன் சுவை  மட்டுமே கிடைக்கிறது. பழச்சாறு சாறு அருந்துவதை விட, பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
 
நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும். ஏனென்றால், நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும்.
 
உங்கள் உடல் உறுப்பக்களைச் சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும். ஒரு 3-நாட்கள் பழங்கள்  மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். அந்த 3 நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள்.