1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்...!!

அதிமதுரத்துடன், திப்பிலி போன்ற சில மூலிகைகளை பொடியாகச் சேர்த்து, நீரில் ஊறவைக்க வேண்டும். இந்த நீரை குழந்தைகள், பெண்கள் குடித்துவருவதால் நாள்பட்ட இருமல் கூட விரைவில் சரியாகும். 

மஞ்சள் காமாலை, நெஞ்சுச்சளி, தலைவலி போன்றவற்றிற்கு சிறந்த மருத்துவமாக அதிமதுரம் இருக்கிறது. மேலும் தலைவலி மற்றும் நெஞ்சு சளியை வரவே வராமலும் தடுக்க இயலும். 
 
பொடியை உணவில் சேர்த்து வருவதால், தொண்டை கரகரப்பு மற்றும் குரல் வளம்பெரும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமதுரம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
 
அதிமதுர தூள் கலந்த நீரை தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் ஆண்கள் எடுத்துக்கொள்வது நல்லது. இந்த அதிமருதத்தை ஊறவைத்தும் எடுத்துக்கொள்ளலாம். ஆண்களுக்கு இருக்கும் ஆஸ்துமா, இளநரை மற்றும் ஆண்மை குறைவு சம்பந்தமான சிக்கல்களையும் எளிதில் சரிசெய்யலாம்.
 
அதிமதுர தூளை ஊறவைத்து, பருகி வருவதால் மூட்டு வலி இருக்காது. உடலில் இருக்கும் வாதத்தன்மையானது குறைந்து இயல்பு நிலையில் இருக்கும். மேலும் சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்க அதிமதுரம் துணைநிற்கும்.
 
சிலருக்கு சிறுநீரகத்தில் நோய் தொற்று ஏற்பட்டு, சிறுநீர் பையில் புண்கள் உண்டாகிறது. அதிமதுர மூலிகையை ஊறவைத்து அதன் நீரை தினமும் குடித்து வந்தால் சிறுநீர்ப்பை கிருமிகள் அழிந்து, புண்கள் சரியாகும். 
 
அதிமரத்தை பொடியாக்கி, நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்துவர குடலில் உள்ள புண்கள் சரியாகும். மேலும், காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு வரும்  அல்சர் புண்களும் எளிதில் குணமடையச் செய்யும் வல்லமை பெற்றது.