1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: புதன், 30 ஏப்ரல் 2014 (18:14 IST)

மோடி நல்ல பிரதமர் வேட்பாளர் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது - அமர்தியா சென்

மோடியைப் பற்றிய எனது அபிப்ராயம் அனைவரும் அறிந்ததே. அவர் நல்ல பிரதமர் வேட்பாளரென்று என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் தெரிவித்துள்ளார்.
 
பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் இன்று மேற்கு வங்காளத்தில் உள்ள போல்பூரில் தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
 
மோடியைப் பற்றிய எனது அபிப்ராயம் அனைவரும் அறிந்ததே. அவர் நல்ல பிரதமர் வேட்பாளரென்று என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் அவர் சில பிரிவுகளில் மிகவும் பிரபலமானவராக இருக்கிறார். தொழில்துறையை சார்ந்தவர்களின் கண்களுக்கு அவர் உயர்ந்தவராக தெரிகிறார். அதற்காக அவர் என்னை கவர்ந்தவர் என்று கூற முடியாது.
 
மதச்சார்பின்மை கொண்டவராகவும், சிறுபான்மை சமூகத்தவர்களான முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களை மிரட்டும் எண்ணம் இல்லாதவராகவும் உள்ள ஒருவரையே நான் விரும்புகின்றேன். அது தான் தேசத்தின் தலைவராக இருக்கும் ஒருவரின் குணாதிசயமாக இருக்கவேண்டும் என்று அவர் கூறினார்.