வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 23 ஜனவரி 2021 (23:19 IST)

சிறுத்தையைக் கொன்று சாப்பிட்டவர்கள் கைது !

கேரள மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு யானையின் வாயில் பட்டாசு வைத்து கொடூரமாகக் தாக்கினர். இதில் அந்த யானை பரிதாபமாக இறந்தனர். நேற்று தமிழகத்தில் யானையின் முகத்தில் தீ வைத்து தாக்கினர். இவர்களைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் இடுக்கி என்ற இடத்தில் சிறுத்தையைக் கொன்று சாப்பிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

அடிபட்ட புலியை சமைத்திருப்பார்கள் என வனத்துறையினர் கருதிய நிலையில், 5 பேரும் தங்கள் ஆட்டைக் கொன்ற சிறுத்தைக்கு பொறி வைத்து பிடித்துக் கொன்று சமைத்துள்ளது தெரியவந்துள்ளது.