வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (15:17 IST)

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கைது

பஞ்குலாவில் ஒரு குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், வண்டியை பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து  கைது செய்யப்பட்டார். 
 
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், ஒரு குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க பஞ்குலாவிற்கு சென்றுள்ளார்.
 
அங்கு விழா முடிந்து திரும்புகையில் யோக்ராஜின் குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டாருக்கும் காரை பார்க்கிங் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் இருந்து கைகலப்பாக மாறிய பிரச்சனையை அடுத்து இருதரப்பில் இருந்தும் 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளதால் யோக்ராஜை கைது செய்துள்ள காவல் துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.