1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2017 (14:34 IST)

8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபரை கொலை செய்த பெண்கள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை அப்பகுதி பெண்கள் கட்டிவைத்து அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜார்க்கண்ட் மாநிலம் ரும்காரா மாவட்டத்தில் உள்ள ராம்கர்க் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி(8 வயது) உறவினர்கள் திருமண நிகழ்ச்சிக்காக குதுமித் பகுதிக்கு பெற்றோருடன் சென்றுள்ளார். அங்கு மிதுன் அன்சாடா என்ற வாலிபர் அந்த சிறுமியை அருகில் உள்ள வனபகுதிக்கு கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் மிதுன் அன்சாடாவை கண்டுபிடித்து கட்டிவைத்து அடித்தனர். பெண்கள் அந்த வாலிபரை கொடூரமாக தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.