1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 18 செப்டம்பர் 2021 (16:07 IST)

60 வயது பெண்ணைக் கொன்று சடலத்துடன் உடலுறவுக் கொண்ட இளைஞன்!

ராஜஸ்தான் மாநிலத்தில்தான் இந்த கொடூர செயலை 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஹனுமன்கர் என்ற பகுதியில் தனியாக வசித்து வந்தார் கணவரை இழந்த அந்த 60 வயது பெண்மணி. அப்போது அவரின்  வீட்டுக்குள் நுழைந்த 19 வயது இளைஞர் அவரை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றுள்ளார். அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே அவரைக் கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரின் சடலத்தோடு உடலுறவு கொண்டு தனது இச்சையை தீர்த்துக் கொண்டுள்ளார். இதுபற்றி இறந்த பெண்ணின் உறவினர் ஒருவரிடம் அவரே சொல்லியும் உள்ளார். இதனால் அதிர்ச்சியான அந்த பெண் காவல் நிலையத்தில் புகாரளிக்க சுரேந்தர் என்ற அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.