வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2015 (07:32 IST)

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட காஷ்மீர் மாநில சுயேச்சை எம்.எல்.ஏ. ஷேக் அப்துல் ராஷித் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
 
மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் நேற்று தூக்கிலிடப்பட்டார்.
 
யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், இந்தியாவில் மரண தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தியும் காஷ்மீர் மாநில சுயேச்சை எம்.எல்.ஏ. ஷேக் அப்துல் ராஷித் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
 
ஸ்ரீநகர் அருகேயுள்ள லால் சவுக் பகுதியில் கண்டன பொதுக் கூட்டம் ஒன்றை நடத்திய போராட்டக்காரர்கள், பின்னர் பேரணி ஒன்றையும் நடத்தினர்.
 
இதைத் தொடர்ந்து, கண்டன பேரணியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. ஷேக் அப்துல் ராஷித் மற்றும் அவரது ஆதரவாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.