வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 9 ஜனவரி 2021 (16:08 IST)

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தொழிலாளி தற்கொலை !

டெல்லியில் தொடர்ந்து 45 -வது நாளாக மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள். நேற்று விவசாயிகள் 8 ஆம் கட்டமாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், இன்று டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னையைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

டெல்லியில் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தங்களின் ரத்தத்தை மையாக மாற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியும், கடும் குளிரிலும் வெயிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பல கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் நேற்றும் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. ஆனால் இப்பேச்சுவார்த்தை தோல்வியுற்றதாகத் தகவல் வெளியானது.

ஆனால் எக்காரணம் கொண்டும் இச்சட்டங்களை திரும்பப் பெற மாட்டோம், இச்சட்டங்களை நீக்கமுடியாது. ஆனால் சில திருத்தங்கள் செய்யவுள்ளதாகக் மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் போராட்டம் மேலும் தீவிரமடையுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வரும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தை விவசாயிகளுடன் நடத்தப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் இன்று டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னையைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையைச் சேர்ந்த பெருமாள் என்ற கூலித் தொழிலாளி, மரக்கடையில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் அவர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.