1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 மே 2017 (13:09 IST)

டீ தோட்ட பணி பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் துயரம்!!

டீ தோட்டத்தில் வேலை செய்த மூன்று பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அசாம் மாநிலம் ஜோர்ஹாத் நகரை அடுத்த கூடொங்கா டீ தோட்டத்தில் ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகின்றனர். வேலையை முடித்து இரவு 8 மணியளவில் வேனில் வீடு திரும்புவது வழக்கம்.  
 
இந்நிலையில் 12 பெண்கள் சென்ற வேன் ஒன்று, 9 பெண்களை அவர்களது வீடுகளில் இறக்கி விட்டு, பின்னர் 3 பெண்களுடன் பயணித்தது.
 
இதனை பயன்படுத்திக்கொண்டு, ஓட்டுநர் யாருமில்லாத மறைவான இடத்தில் வண்டியை நிறுத்தி, வண்டியின் ஓட்டுநரும், உதவியாளரும் சேர்ந்து 3 பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் வண்டியில் இருந்து கீழே குதித்துள்ளனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை காப்பாற்றியுள்ளனர். 
 
இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.